* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அசத்தலானவளே.....!
 

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம் 
உன்னைக்காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன...




அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை
உனக்கு பிடிக்காமல்
போய்விடுமோ
என்ற பயத்தில்.......






*************







உன்னைக் காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும் இருக்க
கற்றுத் தந்த என் காதல்
ஆசிரியை நீ......






************







குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ 
படாது பாடு படுவதுதான்
என்னை
ரசிக்க வைக்கிறது.....





*************








நாய்க்கு நீ பயந்து 
என்னைக்  கட்டிப்
பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்.....






*************







நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது 
நீ  மிகயழகு.....




அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல்
பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு....






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 152 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free