* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {11}
 



இனியவளே....! {11}



 

இனியவளே…


என்னை வெப்கொம்மில்
விடாமல் பார்க்கிறாயே
ஏன் வீட்டில் யாருமே
இல்லையா..?






************************





 ஹையோ ! செல்லம் நீ திமிரா
பேசும் போதே நினைத்தேன்
இவ்வளவு அழகாய் இருப்பாய் என்று
அடிக் கள்ளி...





*************************




கண்டதும் காதலில்  எனக்கு நம்பிக்கை
இல்லாமல்  போனது  சாட்டில்  உன்னை
சந்தித்ததால்......






***************************







உலகமே என்னை  ஒதுக்கிவைத்தாலும்
ஆன்லைனில் நீ நின்றால்  போதும்
உலகத்தையே  ஒதுக்கி வைப்பேன்
உனக்கு முன்னாலே....






**************************



நாம் சாட்டில் பசும்போது
நமக்கே தெரியாமல்  பல  கவிதைகள்
இறந்து  போகிறது இனியாவது
நாம்  பேசுவதை பதிந்துவை
நீ கிழவி ஆகும்  போது
படித்துக்  காட்ட வேண்டும்...






*****************************



என் கண னி  என்னவோ
நான்  தன்னை பார்பதாய் நினைத்து
ரொம்ப வெக்கப்படுகிறது  
நீ ஆன்லைனில்   வந்துவிட்டாயா என
அடிக்கடி நான்  பார்க்கும் போது.....






****************************




 
என் மெசெஞ்சரை கேட்டுப் பார்
என் காதலை உன்னிடம்
சொல்ல வந்து எத்தனை தடவை
உனக்கு அனுப்பாமல் அழித்த
கவிதையை...........






*****************************







என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில்
எல்லாம் தெரியும் என்று
அவாக்கு எப்படி தெரியும்
எனக்கு உன் கூட சாட் பண்ண
மட்டும்தான் தெரியும் என்று....






*****************************************
*******************************
*********************
***********
****
*



-யாழ்_அகத்தியன்



 
  Today, there have been 110 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free