* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இலக்கியமானவளே.....…!
 

எந்தக் கவிதையும்
என்னவள்போல்
எழுத வைத்ததில்லை.....





***************







என்னவள்போல் எந்தக்
கவிதையும் என்னைக்
கவிஞனாக்கியதில்லை.....






***************








அவள் தேடிய வாசகன் நான் என்பதைவிட
எனக்கான கவிதை அவளே என்பதே
மிகச் சரியானது......






*************







என்னால் எழுதவே முடியாத  கவிதை 
அவள்
என்றாலும்
அவளால் வாசிக்கப்படும் கவிஞன்
நான்........






***************






எந்தக் கவிதைக்குமான
சொந்தக்காரன் நானல்ல
எனக்கேயான கவிதையை
சொந்தமாக்கிய கவிஞன் நான்....







************************************
***********************
*****************
********
****
**
*




                                                                    - யாழ்_அகத்தியன்




 
  Today, there have been 22 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free