* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்னையே தெய்வம்....…[02]
 

அன்னையே தெய்வம்…...[02]





ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த
மெத்தையில் படுத்திருக்கிறேன்

உன் இருகையில் மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்.....






****************







அம்மா உனக்கு அவ்வளவு
பாரமாய் இருந்தேன் என்றா
பால் கொடுத்து என்னை
வளர்த்தாய்  நீ தூக்கவே
முடியாதளவுக்கு.........






****************








வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு.......






*****************







ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்

 
நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்
போது......





*****************







எல்லாம் சேலைதான்
எனினும்

 
நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது......






*****************








என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட


 நான் விழுந்துவிடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்........






********************************************
****************************
*****************
********
****
**
*



                                                             யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 2 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free