* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நீ வாழ நான் பாடுவேன்...!
 


நீ வாழ நான் பாடுவேன்........!





நீ ஒட்டிவிட்டு
எறிந்த
பொட்டு நான்



யார் யாரோ
கால்களால்
மிதிக்கப் 
படுகிறேன்......






************







என்னை நீ  ஊதிவிட்டு
உதைக்கும்போதுதான்
தெரிந்துகொண்டேன்



எனை வீரனாய்
நினைக்காமல்


நீ
விளையாட்டு
பந்தாய்த்தான்
நினைத்தாய் என்று.....






************







ஆச்சரியமாகத்தான்
இருக்கிறது



கவிஞனாக்கினாய்
என்ற கோவத்தில்



உனக்காக நானெழுதிய
எந்தக் கவிதையிலும்
ஆயுத எழுத்து
இல்லாமல் இருப்பது....






************







அன்று உனக்கும் சேர்த்து 
சுவாசித்தேன்
இன்று உன்னவருக்கும் 
சேர்த்து  சுவாசிக்கிறேன்....






************







 
நீ வாழ்ந்தவீடு நான்
என்னை விட்டுவிட்டு
புகுந்தவீடு 
சென்றுவிட்டாய்



இனி நீ திரும்பிவர
நினைத்தால்
தயவு செய்து
தனியாக  வந்துவிடாதே



நீ இல்லாமல் சாய்ந்து 
கிடக்கும் நான்
உடைந்து 
விழுந்துவிடுவேன்.....






**********************************
************************
***************
*****
**
*




                                        -யாழ் அகத்தியன்



 
  Today, there have been 92 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free