* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[10]
 



கவியானவளே...[10]






உனக்காக ஏதாவது
எழுதும் போதுதான்


எழுத்துக்களின்
நெருக்கடியில் சிக்கி
மூச்சு விட இடம்
தேடுகிறது என் காதல்....






************************







என்னைப் போல் யாரும்
கண்ணைத்தானம் செய்வதை
பார்த்துவிட்டு இறந்து
போயிருக்க மாட்டார்கள்...


ஆனால்...



கண்ணுக்கும் தெரியாது
நான் இறந்து போனது
அவள் திருமணவீட்டில்
என்று....






****************************







உனக்காகவே உழைத்ததில்
உன்னை வாங்க மறந்துவிட்டேன்
என் மனதையும் உன்னிடம்
கொடுத்ததால்.....






*******************************







நதியாக ஓடி வா என்றாய்
வந்த பின்தான் தெரிந்தது
என்னை உன்னோடு கலக்க அல்ல
கரைக்கத்தான் வரச்  சொன்னாய்
என்று....






*****************************







உன் ஆடையின் அழகில்
உன்னழகு யாருக்கும்
தெரியக் கூடாது என்பதிலும்
நான் அக்கறையாக இருந்ததில்


தோற்த்தான் போனேனடி
உன் ஆசைக் கணவரிடம்....






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 136 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free