* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {04}
 



இனியவளே....! {04}







இனியவளே…


என் இறந்த காலம் மிக சோகமானது
அதை மறக்க வைக்க இறைவன் கொடுத்த
நிகழ்காலம்தான் நீ எனக்கு.......






**********************************







நான்பொய் சொல்ல
விரும்பவில்லை


உன்னை ஞாபகப்படுத்த
உன் புகைப்படம் வேண்டாம்
உன் புன்னகையும் வேண்டாம்
உன் கவிதையும் வேண்டாம்
ஏன் உன் நினைவும் வேண்டாம்
உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்க எதுவாலும் முடியாது
உன்னைத்தவிர எனக்கு.....






*********************************





இதுவரை நான் அசிங்கமானவன்
என்று சந்தோசப்பட்டதில்லை
நீ அழகானவன் என்று
சொல்லும் வரை....






***********************************







நான் உன் கவிதையின் ரசிகன்
அதனால்தான் சொல்கிறேன்
இன்றே இறந்து போக தயார்
அடுத்த நொடியே நான்  உன்
பேனாவாக பிறப்பேன்  என்ற
உறுதி மொழி  கிடைக்குமென்றால்.......






*****************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 166 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free