* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் சிந்தனையில் பூத்தவைகள்......!
 


என் சிந்தனையில் பூத்தவைகள்.....!





உன் எதிரியால் விழுப்புண்
அடைந்து விட்டாயா…
கவலைப்படாதே

எதிரிக்கு தெரிந்த
உன் பலவீனத்தை
தெரிந்து கொண்டதில்
சந்தோசப்படு......






***********************






தோல்வியென்னும்
படியால்
ஏறித்தான்
வெற்றியென்னும்

பரிசை பெறமுடிகிறது...






**********************





வாழும்வரை போராளியாய் இரு
நீ விபத்தில் இறந்தாலும்
அதுவும் வீரச்சாவுதான்......






***********************






உலகமே தெரியாத குஞ்சு கூட
பாதையே இல்லாத
ஓட்டை
உடைத்து வரும்போது

பாதைகள் நிரம்பிய உலகத்தில்
ஏன் கண்ணிருந்தும்

குருடனாய் வாழ்கிறாய்....?






***********************





விழுந்தால் மண்ணோடு மண்ணாக
நீ இன்னும் சாகவில்லை
மறந்துவிடாதே…

இன்னும் நீ உயிர் உள்ள
விதை என்பதை..






***********************





வெற்றியின் பெறுமதி
தோல்வியால்தான்
உணரமுடியும்...






***********************






நம்பிக்கை ஊனமானல்
கால்களால் நடக்க முடியாது....






***********************





திரும்பிப் பார்க்காமல்
எவன்
ஓடுகிறானோ  அவனே
நம்பிக்கையோடு ஓடுகிறான்...






***********************






வாழ்கை என்பது நிரந்தரமில்லை
எனவே வாழ்வதற்காய் உழைக்காதே
வாழ்ந்துகொண்டே உழை...






***********************






முட்களால் காயப்படமால்
பறித்த எந்த ரோஜாவின்
அருமையை யாரலும்
தெரிந்து கொள்ள முடியாது..






***********************





இயங்கிக் கொண்டே இரு
நீ இறக்கவில்லை என்பதையாவது
நிருபிக்க....






***********************





காயப்படாமல் புல்லாங்குழல்
ஆக முடியாது.....






***********************





வினாடிகளை விணாக்குபவன்
மணித்தியாலங்களை பற்றி
பேசக் கூடாது.....






***********************





அறிவுரைகளால் உன்னை
அடைகாக்க மட்டும்தான் முடியும்
நீதான் உடைத்து வெளிவரவேண்டும்...






**********************






தோல்வியென்னும் புள்ளிகளால்தான்
வெற்றியென்னும் கோலம் போட முடியும்..






***********************





உன் ஆணிவேர் ஆழமாய் இருந்தால்
எந்த சுனாமியாலும் உன்னை
எதுவும் செய்ய முடியாது....






***********************






கண்ணாடிப் பெட்டிக்குள் வாழ்ந்தாலும்
மற்றவர்கள்
உன்னை பார்க்கும்படியாக
கடிகாரமாய் வாழ்.......






***********************






இந்த உலகம் உனக்கு  சிறையல்ல
நீதான்
  கைதியாய் வாழ்கிறாய்...






***********************





நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்
ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது......






***********************





வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது....






***********************





தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது



நீ நினைப்பது போல வாழ்க்கை

ஒன்றும் மரதன் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஒட்டாமே....






***********************





பெருமை என்பது
உன்னைவிட
  திறமைசாலிக்கு
நீ
கைதட்டுவதில் அல்ல

அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்....






***********************





இந்த உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற



இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்....






***********************





உனக்கு நண்பன்
இருக்கிறானோ
இல்லையோ

உனக்கு எதிரி
இருக்க வேண்டும்
ஏனெனில்

உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்...






***********************





யாரு உன்னை உறிஞ்சி எறிந்தாலும்
முளைத்து வா
பனங்கொட்டையாய்


அதில்தான் உள்ளது

தனித்தன்மை......






***********************





யாருக்காகவும் கண்ணீர்விடு
 யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே....





***********************





உன்னில் வளரும்
நகத்தையும்,
முடியையும்
வெட்ட
மறப்பதில்லை நீ
ஆனால்.....


நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்....






***********************





வாழ்க்கையில் மிதக்க
கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்


நீந்தக் கற்றுக்கொள்

அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்.....






***********************






தோல்விகள் என்பது
உன்னை தூங்க
வைக்க
பாடும் தாலாட்டு அல்ல


நீ நிமிர்ந்து நிற்பதற்கான

தேசிய கீதம்....






***********************






குட்டக் குட்ட கல்லாகாதே
குட்டக் குட்ட சிலையாகு....






**********************





வாழ்க்கை என்பது ஒரு புத்தகம்
அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல


ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை.....






***********************






உன் உருவத்தை உனக்கே
காட்டிக்கொடுப்பது கண்ணாடி

உன் உள்ளத்தை மற்றவர்களுக்கு
காட்டிக்கொடுப்பது உன் பேச்சு.....






***********************






யாரையும் தேவையில்லாம்
விலக்கி வைக்காதே
வேணும்
என்றால் ஒதுக்கி வை

உனக்கு தேவை ஏற்படும்போது
அவர்களே தெய்வமாகவே
தெரியக்கூடும்.....






***********************






எல்லாம் தெரியும் எனக்கு
என்று நினைப்ப்தும்

எனக்கு தெரிந்த எதுவும்
யாருக்கும் தெரியாது என்று
நினைப்பதுவுமே


மிகப் பெரிய

முட்டாள்தனம்......






***********************





இந்த உலகம் என்பது
ஒரு வகுப்பறை

நேற்று யாரோ
இன்று நாம்
நாளை யாரோ...






***********************





அடுத்தவனின் நிழலில் நின்று
குளிர் காய்வதை விட

தனியாக நின்று கருகிப்
போவதே மேல்.....






***********************





தோல்விகள் மட்டுமே
உன் முயற்சிகளை
சோதிக்கும்

உன் முயற்சிகள் மட்டுமே
வெற்றிகளை
பெற்றுததரும்....






***********************





இழப்புகளின் பெறுமதியில்
எந்த வெற்றியும் தீர்மானிப்பதில்லை

வெற்றிக்கான விருது  அதற்கான
இழப்புகளின்  பெறுமதியால்
  தீர்மானிக்க  படுகிறது.....






***********************





மனிதனுக்கு ஞாபக சத்தி
எவ்வளவு
அவசியமோ
அவ்வளவு அவசியம்
மறதியும்...






***********************





வாழ்க்கை எனும் சதுரங்கத்தில்
உன்னோடு விளையாடுகிறது விதி



நீ வெல்ல வேண்டுமானால்
உனக்கான களச்சூழ் நிலையை
நீயே உருவாக்கு....






***********************





சந்தர்ப்பம் என்பது
தேடி வருவதில்லை
உன் முயற்சியின்
தேடலுக்கு  கிடைக்கும்
பரிசு....






***********************





தேடல் என்ற பசி இறக்கும்வரை
இருந்தால் வெற்றிகளே அதற்கான
உணவு....






***********************





கட்டாயத்தில் வருவதல்ல காதல்
கட்டாயங்களை மீறி வருவதே காதல்....






***********************





எதிர்க்கும் சக்தி இல்லாதவன்
ஆசைப்படாமல் இருப்பதே சிறந்தது...






***********************





ஆழமான நம்பிக்கை உன்
இலக்கின் மீது இருந்தால்

நீ எத்தனை தடவை மூழ்கினாலும்
இலக்கின் கரையைசேர்ந்தே தீருவாய்..






***********************





பணத்தின் மீது எனக்கு
பொறாமை அதிகம்தான்

அது யாருடன் அதிகம் சேர்கிறதோ
அவர்களை
  அதிகமாய் உலகத்துக்கு
பிடிக்கவைத்துவிடுகிறது ...





***********************





தூண்டில் இல்லாமலே
சிக்கிக்கொள்றாய்
உன் நாவால் நீ....






***********************





உன் நாவிற்கு தெரிந்த
உன் பலவீனம் 
அது யாருக்கும்
சொல்லிக்கொடுக்கும் வரை
உனக்கே தெரியாது...






***********************





தெய்வம் பேச ஆரம்பித்தால்
மனிதனாய் தெரிவான்
மனிதன் மெளனமாய் இருந்தால்
தெய்வமாய் தெரிவான்....






***********************





துன்பமே பெரிய நோய்
அதற்கான தடுப்பு மருந்தே
மெளனம்....






***********************




இலக்கு உன் கண்களுக்குத் தெரிந்தால்
அதற்கான முயற்சி தூங்கவே கூடாது...






***********************





மெளனம் ஒரு மொழிதான்
அது மற்றவர்களை
பேச வைக்கிறது.....






***********************





ஒவ்வொன்றாய் நீ இழக்கும்போதுதான்
உணர்ந்து கொள்வாய் உன்னிடம்
எவ்வளவெல்லாம்
இருந்தது என்பதை.......





***********************




அவமானத்துக்கும் விமர்சனத்துக்கும்
காது கொடுப்பவனால் எதையும்
சாதிக்க முடியாது........






***********************






வலிதாங்கும் இதயத்தைத்தான்
வாழ்க்கை வணங்கும்


குட்டு வாங்கும் தலையென்றால்
குட்ட மட்டுமே செய்யும் இந்த
உலகம் ......






***********************





சரியான பாதையில்  கிடக்கும்
முட்களுக்கு பயந்து
தவறான பாதையில் நடந்தால்
முற்காட்டைதான் சென்றடைவாய்......






***********************





விளங்கும் படியாய் உன்னை நீ
விளங்க படுத்தாதவரை
யாராலும் உன்னை புரிந்து
கொள்ளமுடியாது.....






**************************************************
*********************************************
*********************************
**********************
****************
*************
*********
***
**
* 


-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 39 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free