* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்பானவளே.....!
 


எறும்பு ஊர கல்லும்
தேயுமா  என்பது தெரியாது
உன் மனக்கல் மீது
யார் ஊர்ந்தாலும்
அவர்கள்தான்  தேய்வார்கள்
என்பது மட்டும்
தெரியும்.....






************







என் கவிதைகளின்
எழுத்துப் பிழைகளை
நீ சரி செய்வதைவிட
மிக அழகு  உன்
உடையை நீ சரி
செய்வது.....






************







நீ
ஆசைபட்ட  பொருட்கள்
எல்லாவற்றையும் வாங்கி
பத்திரமாய்  வைத்திருக்கிறேன்




பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு
ஆசை வந்துவிடும் என்ற
நம்பிக்கையில்.....






**************







குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்.....





************







பூ
செடியை
சுற்றுமா என்ன..?




நீ
துளசிச் செடியை
சுற்றும்போது




என்னை நானே
கிள்ளிப்
பார்க்கிறேன்....





**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்




 
  Today, there have been 72 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free