* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் பாடல்....{03}
 

என் பாடல்....{03}





எங்கிருந்தாய் இதுவரை நீ
உன்னைத் தேடித்தானே என்
கண்கள் களைத்தது நீயும் கொஞ்சம்
என்னைத் தேடியிருந்தால் எப்போதோ
எப்போதோ சேர்ந்திருப்போமே...





உன்னைக் காட்டி கொடுத்த
கண்கள் காதலை கற்றுக்
கொடுக்கிறதோ கவிதை
தான எழுதுறேனோ
இமைத்திடும் பொழுதினில்
எனை மறந்து பார்க்கிறேனோ
உன் பார்வை ஒன்று போதுமே
நீ அணைத்திடும் குழந்தையாவேனே...





விடியும் பொழுதில் நீ
கிறுக்கும் கவிக்கோலம்
ரசித்திட விழித்துடுவேனே.....
மாலைப் பொழுதில் நீ பாடும்
தாலட்டை கேட்டே என்
இமை மூடுமே....





உன் பார்வையின் தொலைவிலே
தொலைந்திடாமல் வாழ்ந்திட
வரம் கேட்பேன் என்
உறக்கத்தில் கூட உன் இதயம்
துடிக்கும் சத்தம் கேட்க
தவமிருப்பேன்......
 நீ சூடும் பூவிலும்
நானிருக்க பூத்திருப்பேன்.......





எனக்கும் உனக்குமான
உலகம் படைத்து நாம்
கையோடு கை பிடித்தபடி
சுற்றித் திரிய வேண்டும்
காதலர்பூமியென பெயர்வைத்து
தினம் கவிதைகள்
படைத்து ரசித்திடுவோமா.....







**************************************
*************************
****************
************
****
**
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 38 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free