* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  சாந்தமானவளே.....!
 

என் காதலா உன் காதலா
பெரிதின்னு பார்பதற்காகவாவது
நாமிருவரும் காதலிக்க வேண்டும்
உன்னிடம் நான் தோற்றுப் போனாலும்
பரவாயில்லை...





************







நீ என்னை இயக்க ஆரம்பித்தாய்
இதயம் தன் பொறுப்பு
பறிபோனதே தெரியாமல்
துடிக்க மட்டுமே செய்கிறது....





*************







நீ எனக்கு கிடைத்தமைக்கு
அமைதியாய் நன்றி சொல்லி
வழிபடத் தொடங்கினேன்



எனக்கு மட்டும் கேக்கும்படியாய்
என் மனசு இறைவனை
திட்ட ஆரம்பித்தது



தாமதமாய் உன்னை
எனக்கு
காட்டியமைக்காக.....






************







என் புகைப்படத்தை எதற்காக
எல்லாரிடமும் காட்டுகிறாய்
என்று கோவப்படுகிறாய்



அப்போதுதான் என் இதயம்
எனக்குள் இருப்பதற்காய்
கவலைப்பட்டேன்.....






************







"நான் உங்களை காதலிக்கிறேன்"
என்பதை
மந்திரமாய் சொல்லிக்
கொண்டிருக்கிறாய்



உன் மேல் உள்ள பக்தியில்
எனக்கு சாமி வந்து
ஆட  ஆரம்பிக்கிறேன்.....






**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்



 
  Today, there have been 144 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free