* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நிலவானவளே.....!
 


நிலவானவளே.............!






நீ
என்னைக் காதலிக்கவில்லை
என்ற சொல்லை எறிந்தால்
பதிலுக்கு உனக்கு மட்டும்
கவிதைகளை தந்து கொண்டே
இருக்கும் மரம் நான்......






***********************







நான் மழைக்கு பள்ளிக்கூடம்
ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால்
அது
உனக்கு கவிதை எழுத துடித்த போது
மட்டும்தான்....






***********************







நல்ல வேளை நான் கவிதை எழுத
முயற்சிக்கவில்லை
அப்படி எழுதியிருந்தால்
உன்னை விட அழகான கவிதையை
என்னால் எழுதியிருக்க முடியாது....






***********************









நீ கட்டி அணைத்தால்
தூங்காது தலையணை
நான் கட்டிப்பிடித்தால்
தூங்காது பேனா......





***********************





உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம்
பொறாமைப் படுகிறார்களோ
தயவு செய்து அவர்களைப் பார்த்து
நீ கோவித்து விடாதே
அவர்கள்தான்
என் கவிதைகளின் ரசிகர்கள்....






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 100 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free