* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  சிலையானவளே.....!
 


சிலையானவளே.....!






நீ கொடுத்த முத்தத்தால்
மொய்த்துக் கொள்கின்றன
என்னைச் சுற்றி தேனீக்கள்....





************







அழகைப் பற்றி
எழுதச் சொன்னார்கள்
நான் உன்னைப் பற்றி
எழுதினேன்.....


உன்னைப் பற்றி
எழுதச் சொன்னார்கள்
நான் கவிதையைப் பற்றி
எழுதினேன்....






************







 உன் உன்னைப் பார்த்து
எழுதிய கவிதைகள்தான்
என் சொந்தக் கவிதைகள்......







************







நிலவின் கையால்
சாப்பிட்டபின்
நிலாச்சோறு
பிடிக்கவில்லை.......







************








எழுந்தாலும்
விழச் சொல்லும்
உன் கன்னக்குழி......






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
 
  Today, there have been 41 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free