* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என்னவளே...!
 


என்னவளே.......!





இதுவரை நான் எந்தக்
கவிதையையும் சுட்டதில்லை
உன் பெயரைத் தவிர......






************







என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை............






*************








உன் சேலை நழுவுவதைப்
பார்த்தால் பயமாக இருக்கிறது
விழுந்து விடுவேனோ என்று....






************








நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை
நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்......






************







நீ எது கேட்டாலும் சொல்வேன்
உன் அழகுகளில் எந்த அழகு
பிடிக்கும் என்று கேட்டால் மட்டும்
சொல்லமாட்டேன்



சொன்னால்... உன் எல்லா
அழகுகளின் கோவத்துக்கும்
ஆளாகிவிடுவேன்.......






*********************
*************
********
*****
**
*




-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 159 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free