* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கற்றது காதலை......!
 


கற்றது காதலை......!




சேற்றில் விழுந்தாலும்
காதலில் விழுந்திடாதே...

 

உன் வீட்டில் எல்லோரும்
தலை முழுக வேண்டிவரும்...






**********






நீ
கொலை செய்த
கைதி என்றால்கூட



உன் விடுதலை
அன்றாவது
யாரையாவது
எதிர்பார்க்கலாம்



நீ
காதல் செய்தால்
எதிர்பாரமல் கூட
உன் சாவுக்கு
சொந்தம் வராது....






***********





 

உன் காதல்  குழந்தையை
கலைக்க  வைத்தியர்
தேவையில்லை...


உன் குடும்ப உறுப்பினர்
ஒருவர் போதும்....






*****************







காதல் திரைப்படமா..
பார்த்து வாங்கி வா
என்றார்கள் வீட்டில்


நான் காதலையே
வாங்கி வந்தேன்
விரட்டிவிட்டார்கள்
வீதியில்.....







********************************************
********************************
**********************
**************
************
********
**
*



-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 158 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free