* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அமைதியானவளே......!
 

நான் என்னை
மறந்து ரசிக்கும்
இடம் எது தெரியுமா



உன்னை முதல் முதல்
சந்தித்தபோது நான்
சிலையாய் நின்ற அந்த
பூங்காவனம்தான்.....






*************







என் காதல் கவிப் புத்தகத்தை
உன் நெஞ்சோடு  அணைத்துக்
கொண்டு  செல்கிறாய்


எப்படியும் நீ வீடு சென்று
படிக்கும் போது
காமக்கவிதையாய்
மாறியிருக்கும்.....





************








உனக்கு பயப்பிடமா
பேய் கதை
சொல்ல தெரியாதா



உன்னை பார்த்து
நானல்லவா
பயப்பிடுகிறேன்...






************






உன்னிடம் காதலை
சொல்ல நினைக்கும்
பொழுதுகளில்தான்



நான் நானாக இருக்கிறேன்
அதையும் நீயே சொல்லிவிட்டால்
என்னை நான் முழுவதுமாய்
மறந்துவிடுவேன்....





************






உனக்கு காதல்
கதையே தெரியாதா



நீ சொன்ன கதைகள் எதுவுமே
என் காதலை உன்னிடம்
சொல்ல உதவவில்லையே.....






**********************************
************************
***************
*****
**
*






-யாழ்_அகத்தியன்



 
  Today, there have been 89 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free