* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனதானவளே…...!
 

உன்னை நான் ஆசைப்படுவதை
யாரிடமும் சொல்லிவிடாதே



 நான் கதைக்காமல்
விட்டவர்கள்  எல்லாரும்
என் மேல்
கோவித்துவிடுவார்கள்....






************







உன் மேலான என்  ஆசையெல்லாம்
  ஒன்று சேர்ந்து
  என் ஆசையில்  ஒன்றான என் கோவத்தை 
உன்னிடம்  காட்டவேண்டும்  என்பதை
நிராசையாக்கிவிட்டது....






************







விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோவிக்க
விடுவதாயில்லை


உன்
விளையாட்டுத்தனம்.....






************







உன் வீட்டில் நீ
வாயாடியாம்



பொய்
சொல்கிறார்கள்



இதுவரை
உன் முத்தம்
வலித்ததில்லையே....






************







ஆசை  இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது



உன் மேல்  கோவிக்கும் 
போதுதான் 
என் ஆசைகள் எல்லாம்
எழுந்து  நிற்கின்றன....






**********************************
************************
***************
*****
**
*
                                                               




-யாழ்_அகத்தியன்



 

 
  Today, there have been 168 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free