* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் பாடல்....{01}
 



என் பாடல்....{01}



romance-37 - image


காதல் வந்தால் கவிவந்தால்
மிக அழகு இரவு வந்தால்
நிலவு பூத்தால் பேரழகு நீ வந்தால்
உன் நினைவிருந்தால் கோடியழகு





மலரும் பூ முகமே
உன் கண்கள் இமைத்தால்
உன் இதழ்கள் பிரிந்தால்
என் காயமாறுமே கண்ணே





கொஞ்சிடும் உலகமிது
கெஞ்சிடும் இதழ் எனக்கு
பக்கம் வந்துவிடு பாவையே
முத்தமிடு பாத்திருக்க
கொள்ளையிடு பள்ளியறை
நேரமிது படித்திட வா….
படிப்பிக்க வா..






அழகானா இரவிருக்கு ஆசையோடு
நானிருக்கு அள்ளிஎடு அத்தனையும்
பிச்செடு மூச்சுவிடு முகம் காட்டு
முத்தசுகம்தேடு முழுமையாய்
ஏந்திவிடு  எனக்கென நீயிரு





விட்டது தொட்டது விடாதே
எட்டியதேது தட்டிக்கொடு எல்லாம்
கனிந்திருக்கு மெதுவா பறித்தெடு
கண்ணே கனியே களைக்காமல்
முத்தமிடு ஏ குயிலே
மயங்குமிசை கேள்.......





எடுத்திட வா கொடுத்திட வா
பெற்றிடவா  வா வா
உச்சிமுதல் பாதம்வரை
முத்தமிட்டு நீந்தவா
உன்னில் என்னை
மூழ்கடிக்க வா வா....






புதுப் புதுசாய் பூப்பது எந்தசுகம்
அடைமழை பெய்கிறது வா நிலா
நனைந்திடுவோம் புதுக்கவியாய்
இணைந்திடு போர்வைக்குள் புழுவாய்
நெழிந்துவிடு ஏ ஏ ஏ நானிருக்கேன்
நாணத்தை களைந்துவிடு நமக்கினி
யாரும் வேண்டா.......







*****************************
*********************
************
******
***
*



-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 109 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free