* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {09}
 



இனியவளே....! {09}





இனியவளே..



என் காதலை சொல்ல  ஒன்றுக்கு
மூன்று பூக்கள்  பறித்து வந்தேன்
ஏதேனும்  ஒன்றாவது வாடாமல்
இருக்குமென்று....



என்ன அதிசயம் பூவான
உனைக் கண்டவுடன்
எல்லா பூக்களும்
சிரிக்கிறது........






***************************







அழகான பூவாக இருந்தாலும்
பூக்கடையில் பூ
வாங்க பிடிக்காது

அவர்கள் யாரை நினைத்து
பறித்தார்களோ
யாருக்கு தெரியும்........






*************************







தயவு செய்து என்னை கவிஞன்
என்று எப்போதும் ஏற்றுக்கொள்ளாதே


ஏனெனில்....

ஒவ்வொரு தடவையும்
நான்  உண்மை  சொல்லும் போதும்
உன்னிடம் உண்மை  சொல்லவாவென
கேட்டு  விட்டு சொல்ல
வேண்டி வரும்......






***********************







என் நம்பிக்கைதான்  நீ என்று
சொன்ன பின்னும்  உன் வாழ்க்கையை 
தர மறுத்தால்  நம்பிக்கைதான் வாழ்க்கை  என்பது
பொய்த்து விடுமல்லவா  நீயே சொல்.....






*****************************************
*******************************
*********************
***********
****
*



-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 121 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free