* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் காதல் கவிதைகள்....!
 


என் காதல் கவிதைகள்....!





உன் தோழியின் கல்யாணவீட்டில்
தாலிகட்ட உதவிசெய்த
உன்னைப் பார்த்தபின் தான்
எனக்கும் ஆசை வந்தது
தாலிகட்டி கல்யாணம் செய்ய....






******







உன்னோடு கூடவர  ஆசையின்றி
விழுந்த உன்  கொலுசுதான்
உன்னோடு கூடவர என் ஆசையை
வளர்த்தது....






******








நான் முதல்த் தடவை
பயணித்த விமானத்தில்த்தான்
உன் நினைவுகளை தரையிறக்கிவிட்டு
முதன்  முதல் உன்னை கனவு
காண ஆரம்பித்தேன்....






******






வருசையில் நின்று  வாங்கப் போன
மருந்துக்கடையில் தான்
வாங்கி வந்தேன் மருந்தே இல்லாத
காதல் நோயை....






*****





உன்னை பலமுறை   சந்தித்த  போதும்
என்னால்  உன் மெளனத்தை கலைக்க
முடியாமல்ப் போன போதுதான்
எனக்கு உதவிசெய்து உறுதிப்படுத்தியது
உன் கைபேசி நீ ஊமையானவள்
அல்ல என்று....






*****





தன் பெயரை பிழையாக
எழுதிக் கொண்டிருந்த சிறுமியிடம்
அழகாய்  எழுத கற்றுக் கொடுத்தேன்
என் காதலியின் பெயரும்
அது என்பதால்....






*****************************************
*******************************
*********************
***********
****
*




-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 75 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free