* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தரிசனமானவளே...!
 


தரிசனமானவளே.....!




உன்  அமைதியான
வேண்டுதலால் 
பொறுமையை
இழந்திருப்பாள்  பூமாதேவி......







************







நீ சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு பிடித்தது
தேவதை தோசம்.....







***********





 

நீ
முருகனைச்
சுற்றுகையில்



முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்......






************







அழகானவள் கிடைக்க
வேண்டும் என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும்
உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க வேண்டும்
என்கிறார்கள்..........






************






 
கடைசியில்  எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது
பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா..?
கோயிலைச் சுற்றுகிறார்களா..?






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன் 
 
 
  Today, there have been 57 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free