* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  பேனாவோடு நான்...!
 


பேனாவோடு நான்...!





என்னவளே...
என்ன யோசிக்கிறாய்..
உனக்காய் நான் எழுதுவதை
இன்னும் என் பேனா
நிறுத்தவில்லையென்றா..?



 
ஆமாம்..
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்...



 
உனக்கு தெரியுமோ தெரியாது
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று...


 

 
ஏன் தெரியுமா...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை


 
 
வாசித்தால்  ஏன் எழுதக்
கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக்
கவலைப்படுவேன்
என்பதால்தான்....

 
 
 
 
பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்து
கொண்டிருக்கிறேன்.....




 
 
இந்த உலகம்
கவலைப்படுகிறது
உனக்காக மட்டும்தான்
எழுதுகிறேன் என்று....

 


 
 
உண்மைதான் அதற்காக நான்
அதிகம் வருத்தப்படுவதுண்டு
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்....




 
 
நான் உனக்காய்
எழுதுவதில்லை
உன்னால்தான்
எழுதுகிறேன் என்று.....



 
 
உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்......

 


 
 
இல்லையென்றால்..
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்....

 



 
நீ என்னைக் காதலித்த
காலங்களை விட உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்
கொண்டேயிருக்கும் பேனாவின்
காலங்கள்தான் அதிகம்.....


 


 
இதனால்தான் சொன்னார்களோ...
காதலித்தவள்
கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை ...


 
பேனா பாவம் பொல்லாததுதான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது அதனால்தான்....


 
 
 
என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும் உன் பெயர்
சொல்லித் துடித்துக்
கொண்டிருந்தேன்......



 
 
என் கவி ரசிகைகளைவிட
என் பேனாதான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது

 

 
 
ஏன் தெரியுமா..
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்


 
 
சேர்த்து தந்தும் தன்னைக்
காதலிக்காமல் உன்னை
மட்டும் நான் காதலித்துக்
கொண்டேயிருப்பதால்......



 
 

உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்துதான்
உன் பழக்கங்களை தெரிந்து
கொண்டேன்....



 
 
இப்பொழுதெல்லாம் பேனா
எழுத ஆரம்பித்தால் நான்
எதுவும் பேசுவதில்லை
பேசி பிடிவாதத்தால்
வலிக்கபோவது என் கை
என்பதால்.....




 
இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும்
ஒருவன்
 

என் பெற்றோர்களுக்கும்
எழுதப்படிக்க தெரியாது.
 





என்னவளே வா..
உனக்காய் எழுதி எழுதி
என் பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப்
போ...........



 
இல்லையேல் என் கைகளை
முறித்துவிட்டு போ.....


 
 
எல்லாம் உன் கையில்தான்
இருக்கிறது வா.....







 **********************************
************************
***************
*****
**
*




 
-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 163 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free