* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே... [01]
 



கவியானவளே... [01]





என் கைக்கெட்டியதில்
வாய்க்கெட்டத் தவறியது
என்றும் நீ மட்டும்தான்.....





******************






கிடைத்தது எல்லாம்
பெரிதாகவே தெரிந்தது நீ
கிடைக்காமல் போகும் வரை......




*****************






உன் நினைவுகளுக்கு
ஆடை மாற்ற வேண்டும்
கொஞ்சம் என்னைத் தூங்க
விடுகிறாயா........





*******************





நீ வேண்டும் என்பது
என் பழைய கவிதை
நீ மட்டும் வேண்டும்
என்பது என் புதுக்
கவிதை.........





*******************







நீ வாங்கிக் கொடுத்த செருப்பு
உன்னைவிடக் கடிக்க ஆரம்பிக்கிறது
நான் மது அருந்த போகையில்....






**********************************
************************
***************
*****
**
*

 

-யாழ்_அகத்தியன்

 

 
  Today, there have been 76 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free