* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அன்னையர் தின கவிதை......…[03]
 

அன்னையர் தின கவிதை........!

 

 

உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு


ஆனாலும்


அவள் கைவிரலில்
உன் கைவாசம்


நீ பிடித்து தந்தவள்
அல்லவா........





******************




என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி


ஆனாலும்


பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்.....






****************






Paristamil

உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்


என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்....






***********************************************
****************************
*****************
************
*****
***
*



-யாழ்_அகத்தியன்


 
  Today, there have been 48 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free