* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என் பாடல்....{09}
 


என் பாடல்....{09}







எந்தன் விழிகளில் விழுந்தவளே
எந்தன் இதயமென ஆனவளே-உன்
பார்வை பட்டதினால் படர்கிறேன்-நான்
காதல்செடியாய் உன்னைச்சுற்றி- உன்
கூந்தல் வாசம்வீச-நானே பூவனேன்.....




யார்தான் நீயென தெரியல
நீதான் நானென பெயர் வைத்தேனே
என் உலகம் ஒரு நொடி சுற்றலையே
நீ என்னை கடக்கையிலே




தூண்டில் போடும் கயல்விழி வீசி
மீனே என்னை கொள்ளையடித்தாய்
உன் உதடு சுழிச் என்னை
கன்னக்குழியில் தள்ளிவிட்டாய்




எந்தன் உயிரே உந்தன் சுவாசம்
நானென சொல்லத் துடிக்கிதே
என் முகம் கொண்டு கண்ணாடி
பார்த்தேன் உந்தன் விம்பம் தெரியுதே




கண்ணுக்குள் என்னையும்
உதட்டில் உன்னையும் வைத்து
எத்தனை நாள் ஏமாத்துவாய்......






****************************************
*******************************
*********************
***********
****
*





-யாழ்_அகத்தியன்

 
 
  Today, there have been 52 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free