* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உலகமானவளே…!
 



உன்னை நாளையும் 
சந்திக்கலாம் என்ற
சந்தோசத்தைவிட 
இன்றும் உன்னைப்
பிரிவதே கொடிது....






************






 நம் முதல் சந்திப்பை பற்றி
யாரிடமாவது பேச
நினைக்கும்  போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது
நம் முதல் பிரிவு....






************







ராஜ்மஹாலில் கூட
கடைசியாக நின்றாலும்
 நுழைந்துவிடலாம்


யாருமே காத்திராத
உன் வீடுதான்



என்னை நுழைய  விடாது
உலக அதிசயமாய் 
தெரிகிறது....





************







எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்



 நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?..





*************







 உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்



அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா



என் கண்கள்
சும்மாவிடுமா..?






**********************************
************************
***************
*****
**
*




                                                                          -யாழ்_அகத்தியன்




 
  Today, there have been 102 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free