* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  வாழ்வதற்கே வாழ்க்கை.......!
 


வாழ்வதற்கே வாழ்க்கை.....!





இந்த உலகம் உனக்கு
சிறையல்ல
நீதான் கைதியாய்
வாழ்கிறாய்....






************








நீ மண்ணுக்காக போராட
தயங்குகிறாய் ஆனால்
ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே
மரமாகிறது......





************








வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது....





************








தடை தாண்டி ஓடிக்
கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத்
தெரியாது



நீ நினைப்பது போல
வாழ்க்கை ஒன்றும் மரதன்
ஓட்டமல்ல அது
தடைதாண்டும்  ஒட்டாமே.....





************








பெருமை என்பது
உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்.....





************








இந்த
உலகம் பூந்தோட்டமல்ல
நீ வளர தண்ணிர் ஊற்ற
இந்த உலகம் பெருங்காடு
நீயாத்தான் வளரவேண்டும்....





************







உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்...



ஏனெனில்



உன்னிடம் அணைக்கும்
சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும்
சக்தியையே
நான் அதிகம்
எதிர்பார்க்கிறேன்....






************









யாரு உன்னை
உறிஞ்சி எறிந்தாலும்
முளைத்து வா
பனங்கொட்டையாய்
அதில்தான் உள்ளது
தனித்தன்மை.....





************








யாருக்காகவும் கண்ணீர்விடு
யாரும் துடைக்க வருவார்கள்
என்பதற்காய் கண்ணீர் விடாதே....





************







உன்னில்
வளரும் நகத்தையும்,
முடியையும்
வெட்ட மறப்பதில்லை நீ


ஆனால்..


நீ வளர மறந்தால்
இந்த உலகமே உன்
கழுத்துக்கு கத்தியாகும்.....





************








வாழ்க்கையில்
மிதக்க கற்றுக் கொள்ளாதே
நீ இறந்தால் தானாகவே
மிதப்பாய்..



நீந்தக் கற்றுக்கொள்
அதுவே நீ கரைசேர
உதவி செய்யும்.....





************







தோல்விகள் என்பது
உன்னை தூங்க வைக்க
பாடும் தாலாட்டு அல்ல



நீ நிமிர்ந்து நிற்பதற்கான
தேசிய கீதம்....





************






குட்டக் குட்ட
கல்லாகாதே
குட்டக் குட்டக்
சிலையாகு.....





************







வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம்
அதில் ஒரு பக்கம்
மட்டும் வாழ்க்கையல்ல



ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை....





*************








உன் பேனாவைக் கூட
மூடிவைக்காதே அதை
திறக்கும் வினாடிகளில் கூட
நீ எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்......






**********************************
************************
***************
*****
**
*

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 17 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free