* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலே வருவாயா..........!
 

காதலே வருவாயா.......!




உனக்கு காக்க  வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்.......






************





 

உன் தூக்கம் கலைக்க விரும்பவில்லை
உன் தூக்கம்  கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்புகிறேன்.......






***********







கவிதைக்காய்
காத்திருப்பதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்.......






*************







உனக்காய் காத்திருந்து 
என் எழுத்துக்களுக்கு  கால் வலிக்கிறது
தயவு செய்து  வரும் போது
வெறும் கையோடு  வந்துவிடாதே..........






**************







என்னைக் காக்க  வைத்து விட்டு
வரும் போது  கவனம்
நீந்த நேரிடலாம் என் கவிதையின் 
கண்ணீரில்..........






**************







இன்றாவது காதலைச்  சொல்லத்தான்
தினமும் காத்திருப்பேன் 
இதுவரை சொல்ல விட்டதில்லை 
காதல்............






************







காதலனாகத்தான் காத்திருக்கிறேன்
கவிதையே காதல் 
கவிஞனாய்..........






***********








கன நேரமாய்  காத்திருந்தாலும்
நீ கேட்டால்  ஏன்தான்
சில நேரமாய்  என்று
பொய்  சொல்லுகிறேனோ........






************





என் உயிர்

உனக்காய் காத்திருந்த  இடத்தில்
நான் காணாமல் போயிருந்தால் 
கவலைப்படாதே 


என் கால்களின் கவிதைகளையாவது
விட்டுத்தான்  போயிருப்பேன்........






*********************************
*************************
**********************
*******
****
**
*





-யாழ்_அகத்தியன்
 
 
 
  Today, there have been 18 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free