* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தேவதையானவளே......!
 




தேவதையானவளே.....!






எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்_ நான்
வெக்கப்படும் கவிதைக்காய்
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்...






**********





நீ மட்டும் சேலை கட்ட
நேரம் எடுப்பதில்லை
சேலை உன்னைக்
கட்டுவதால்....






**********





நீ கவிதை
படிக்கிறாயா


இல்லா...

உன்னைக்
கவிதை
படிக்கிறதா


பார்
மறுபக்கம் போக
பஞ்சிப்படுவதை.....





**********






உன்னைச் சேரும் ஒவ்வொன்றும்
என்னை ரசிகனாக்கிறது


இசைக்கும் உன்
கால் கொலுசு முதல்....






**********





துணிக் கடையிலாவது
என் கையை விடாது
பிடித்துக் கொள்


நீயென்று நினைத்து
நான் பொம்மை கைகளை
பிடித்துவிடுகிறேன்...






****************************************
*******************************
*********************
***********
****
*






-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 125 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free