* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதல் செய்...…!
 

காதலை
கண்களில் வைத்து
உறங்கி விடாதீர்கள்



இதயத்தில் வைத்து
எப்போதும் இயங்க
வையுங்கள்......






************







மலிவான பொருள் கூட
விலைமதிப்பற்ற பொருளாவத
காதலர்கள் பரிமாறும்
பரிசுப் பொருள்களில்
மட்டும்தான்......






***********







உன்னைப் பார்த்து
காதல் வரக் கூடாது


உன் காதலைக் கேட்டு
காதல் வர வேண்டும்.....






************






குழந்தைகளுக்கு  புன்னகை
அழகென்றால்


காதலர்களுக்கு
குழந்தைத்தனமே
அழகு....






***********







ஒரு பூவால்
இருவரை   மலரவைக்க
முடியும்  என்றால்


காதலர்கள் கரம் சேரும்
பூக்களால் மட்டும்தான்....






***********







காதலை பொழிந்து
கொண்டேயிருங்கள்



காதலித்தவள்(ர்) உங்களை
காயவைத்துக் கொண்டே
இருந்தாலும்.....






************








எந்த இழப்பும்
சந்தோசத்தை
கொடுப்பதில்லை



காதலிப்பவர்களிடம்
உங்களை நீங்கள்  இழந்து
கொண்டிருப்பதைப் போல்....






***********






காதல் ஒரு 
அழகான மதம்


அதில் மூட 
நம்பிக்கையே
வேதம்....






**********







மொழிகளை அழகாக்கிக்
கொண்டிருப்பவை
காதல்   கவிதைகள்
மட்டும்தான்......






************







எதுவெல்லாம்
உன் உரிமைகள்
என்பதை தெரிந்து
கொள்வதற்காகவாவது

காதல் செய்.........






**********************************
************************
***************
*****
**
*


                                                                          
-யாழ்_அகத்தியன்



 
  Today, there have been 30 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free