* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இனியவளே....! {14}
 



இனியவளே....! {14}





இனியவளே…

தயவுசெய்து எனக்குமுன்
கண்மூடி கடவுளை கும்பிடாதே
உனை   பிரிந்து   வாழ
பழகிக்கொண்டுவிடுவேன்...






*****







என்னை பக்கத்தில்  வைத்துக்கொண்டு
எதற்காக  எதிர்கால உன் புருசனுக்காய்
ரொம்ப நேரம் வேண்டுகிறாய்....






****







நவக்கிரகத்தை சுற்றி வந்தேன்
உன்னை காணவேண்டுமென்று
உன்னை சுற்றி வருகிறேன் நீ
கிடைக்க வேண்டுமென்று...






******







பார் உன் வரவை அறியாத பக்தர்கள்
எவ்வளவு பூக்களோடு
வருகிறார்களென்று......





******







உனை கண்டவுடன்
கண்மூடி கும்பிட பயமாக இருக்கிறது
நீ காணாமல் போய்விடுவாயோ
என...........






******







நீயே சொல் உன்னை
முன்னுக்கு வைத்துக்கொண்டு
எதை நான் வேண்ட
முடியும் இறைவனிடம்....






******







நீ எதற்கு வேண்டுமென்றாலும்
நேத்தி வைத்துக்கொள்
தயவுசெய்து எதிர்ப்பின்றி நாம்
சேரவேண்டுமென்று நேத்திவைக்காதே......






*****************************************
*******************************
*********************
***********
****
*

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 45 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free