* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  காதலாகி....!
 


காதலாகி.....!
 




நம் வாய்ச் சண்டைகளை
எல்லாம் முடித்து வைக்கிறது
நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து........






************







பலர் என் மேல்
படர்ந்தபோதும்
என்னுள் முளைத்தது
நீ மட்டும்தான்...........






************







நீ நடுங்கி நடுங்கி தந்த
உன் முதல் முத்தத்தை
என்னால் இன்னும்
மறக்க முடியவில்லை.....




நிலா நடுக்கத்தில்
பயந்து பயந்து
வாங்கியதால்.......






***************







நீ  பூச் சூடி பொட்டு
வைக்கும்போது
முடித்து வைக்கிறேன்
உனக்கான என் அன்றைய
கவிதையை.......





*************







அடிக்கடி நீ காணாமல்
போகும் தருணங்களில்தான்
உணர்கிறேன் நீ தேவதை
என்பதை.............







**********************************
************************
***************
*****
**
*



-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 115 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free