* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  அகதியாய் நான்…[2]
 



ஈழத்து
அகதியாய் நான்…[2]
 
 




அண்ணன் புலம்பெயர்ந்த
நாட்டில் சட்டி பானையோடு
சண்டை பிடிக்கிறான்


தம்பி உள்ளான்
சண்டைக்குள்
என்பதால்.....



*************



எல்லாம் இருக்கிறது புலத்தில்
எனக்கு எல்லாமுமான என்
குடும்பத்தை தவிர.......



*************



ஊரில் இருந்துவரும் கடிதம்
பிணப்பாரமாகவே வருகிறது
இறந்தவர்களின் செய்தியோடு
வருவதால்......



*************



புலத்தில் பட்டினி கிடந்து
உழைத்தும் என் குடும்பத்தின்
பசியைத்தான் போக்கமுடிந்தது
தூங்கவைக்க முடியவில்லை.....


*************



புலத்தில்
வயிறு முட்ட உண்டாலும்
வீசவில்லை அம்மாவின்
கைவாசம்.............



*************



நேத்தி வைத்த கோயிலிலும்
செல் விழுகிறது யாரிடம்
போவேன் என் வீட்டை
காப்பாற்ற..........



*************



அங்கு விழுந்தால்தான் 
வெடிக்கும் செல்
இங்கு விழுகிறதா 
என்றாலே இறக்கிறோம்......





**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free