* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  வரமானவளே.......!
 
  
என் கனவே  நீ என்பதால்தான்
கலைந்துபோகும்  உறக்கத்தை
விரும்புவதில்லை  நான்.......






**************







உன் விழிகளுக்கு இமையாக  மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்.......






**************







நீயே எனக்கான  கவிதை என்பதைக் 
கண்டறிந்ததில் கிறுக்கன் நான் 
கவிஞனானேன் உனக்காய் உலகுக்கு....






*************






ஆயிரம் கவிதை எழுதிக் கிறுக்கனானேன்
உன் பெயர் எழுதி கவிஞனானேன்.....






**************






உனக்கான  கவிதை என்று தெரிந்தும்
எனக்கா என நீ கேக்கும் அழகுக்காகவே
எத்தனை கவிதையும் எழுதலாம் நான்......







*****************************
******************
**********
****
**
*



                                                                 
-யாழ்_அகத்தியன்




 
 
  Today, there have been 3 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free