இனியவளே....! {06}
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/surya-so-krishna.jpg)
இனியவளே…
நேற்று வீதியில் தவற விட்ட
தன் ஊன்றுகோளை தேடிய வயோதிபரிடம்
நீ தேடாமல் எடுத்து கொடுத்த போதுதான்
என் பார்வை உன் மேல் தவற ஆரம்பித்தது...
*************************************
![](http://2.bp.blogspot.com/_1hNNjUm0t3w/TK218KwqSTI/AAAAAAAAAHM/YB1hlc6Spx0/s1600/5.jpg)
எனக்கு நிலவை
அதிகம் பிடிக்கும்
என்பதால்தான்
என் இதயத்துக்குள்
உன்னை
வரவழைத்தேன்......
*************************************
![](http://1.bp.blogspot.com/_PYoTniFwyds/TOPz1M77cDI/AAAAAAAAAQ0/Oq2uUCFHJv0/s1600/eye-spy.jpg)
விலக விலகத்தான்
காதல் அதிகரிக்குமாமே
எங்கே ஒரு தடவை
கண் மூடித் திற.....
************************************
![](http://2.bp.blogspot.com/_NnjT1jziido/Sy8Keeq7-DI/AAAAAAAAAA4/-kKySl6fnJI/s320/1481.jpg)
வீட்டுக்கு பக்கத்தில்
கோயில் இல்லை என்ற
கவலை என் அம்மாவுக்கு
எனக்கந்த கவலை இல்லை
எதிர் வீட்டில் நீ இருப்பதால்.....
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|