* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  என்னவனே வருவாயா...?
 



என்னவனே வருவாயா....?
 
 



என்னவனே....


உன்னை  நினைத்து நினைத்து
வாழ வேண்டும்
உந்தன் மடியில்

உயிர் துறக்க  வேண்டும்
வருவாயா..?






*******************







காலை மாலையாவதும்
மாலை 
காலையாவதும்
உந்தன் ஆசைக்குள்

மறையவேண்டும்
வருவாயா......?






***********************







எந்தன் கோட்டையை
விட்டு  நீ 
போனாலும்
நீ போட்டு  விட்டுபோன 
கோடுகள்  ஆறவில்லை
அதற்காகவேனும்

வருவாயா........?






********************







கோழி கூவினாலும்
கோயில்  மணி 
அடித்தாலும்
 கோலம் போட மறந்தாலும்
 
உந்தன் மடியில்  மறக்க வேண்டும்
அதற்காகவேனும் வருவாயா.......?






******************







கனவில் நான் குளித்து
நினைவில் 
காய்கிறேன்
என்னை  உடுத்திக்கொள்ள

உண்ர்வோடு  வருவாயா.........?






*********************







அங்கத்தில் இடம் பிடித்தாய்
ஆசையை தூண்டி விட்டாய்
அனுபவத்தை  கொளுத்தி விட்டாய்
அணையாமல் எரிகிறேன்...
அதற்காகவேனும் வருவாயா...?






********************







கோடை மழையாய்  நீ வந்தாலும் 
காதலா அடை மழையாய்
வரவேற்பேன் 
அதற்காகவேனும்
வருவாயா.....?






*********************







இரவைக் காட்டிக்கொடுக்கும்
நிலவைப் போல 
எந்தன்  வெக்கத்தைக் 
காட்டிக் கொடுக்க

இரவில் வருவாயா.........?






*******************







ஊமையான உலகத்தில்
உன்னோடு 
பாட வேண்டும்
துடிக்காத நரம்பெல்லாம்

இசைக்க வேண்டும்
அதைக்கேட்டு நீ

களைக்க வேண்டும்
அதற்காகவேனும்
வருவாயா.......?






************************







மறந்து விட்டாயா  நம் தனிமை
பிரிந்து  
நான்கு மாதமாச்சு
எங்கே ஒருதடவை

வந்து பிரிந்து விடு...




நாளாக நாளாக
நான் பழுக்கிறேன்

நீ சுட்ட பழம்தானேடா
நான்
பரிமார வருவாயா.....?






********************







இரவும் நானும் சேர்ந்தால் ஏக்கம்
நீயும் நானும் சேர்ந்தால் வெக்கம்
என் ஏக்கத்தை களைந்து விடு

என் வெக்கத்தை பார்க்கவேண்டும்
உன்னோடு நான்அதற்காகவேனும்
வருவாயா.......?






*********************







வருவாயா காதலா வருவாயா
உன் வரவுக்காய் நான் வழியாகிறேன்
என் வாசல் எங்கும் விழியோடு
காத்து கிடக்கிறேன் வருவாயா
காதலா வருவாயா.........
?






************************
******************
*******
****
**
*




-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free