* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  எனக்குள் நீ..............!
 


எனக்குள் நீ.........!





நமக்குள் போர் நிறுத்த
ஒப்பந்தம் வேண்டாம்
நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம்
அப்படியென்றாலாவது
சமாதான மீறல்
புரிகிறாயா என்று பாப்பம்....





*****






நான் குடிக்கவேயில்ல
இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன்
உன்னை
பேசவைக்க வேண்டுமே....






****





என்ன தவம் செய்ததோ
என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில்
மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது....






*****






மழை விட்டது
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
இருந்தும் என்
குடைக்குள்
இன்னும் நீ..






*****





 


கோவம் வரும் போது
உன்னை
நினைக்க சொன்னாய்
வராத போதும்
உன்னை நினைத்தேன்
இப்ப என்னை
நினைப்பாயோ..






*******************************************
*******************************
*********************
***********
****
*




 
-யாழ்_அகத்தியன்






 
 
  Today, there have been 3 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free