* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  இம்சையானவளே..…!
 



உனக்காக காத்திருக்கையில்
என்னைக் கடப்பவர்கள் மட்டும்
ராசியானவர்கள்
உன் முகத்தை
அவர்களில் தேடுகிறேனே....






************






அந்த சூரியனுக்கு யார்
என்னைக்
காட்டிக்கொடுத்தது



பாருங்கள் 
நிலாவுக்காக காத்திருக்கிறேன் 
என்ற  கோவத்தில் என்னை
கறுப்பாக்கி கொண்டிருக்கிறது...






************







உனக்காய் காத்திருந்த
இடத்தில் கொஞ்ச நேரம்
  நி
  ன்
  று
 பார்



உன்னைப் பெற
என்னை  நான் இழந்த
வலி புரியும்....






*************







தாமதமாய் வருவதையே
பழக்கமாய் கொண்டவள் நீ
தெரிந்தும்



உனக்காய் காத்திருக்க
பழக்கப்பட்டவன் நான்....






************







" நிலா" என்று 
யார் உனக்கு பெயர் வைத்தது
உனக்காய் என்னை தேய
வைத்துக் கொண்டிருக்கிறாய்.....






**********************************
************************
***************
*****
**
*




-யாழ்_அகத்தியன்


 
 
  Today, there have been 5 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free