* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உண்மையானவளே........!
 
 
கோவமான உன் முகத்தை பார்பதற்காகவே
என் ஆசைகள் உனக்கு பிடிக்காத செயல்களை
தெரிந்து வைத்திருக்கிறது......






************








வாய்காரன் நான் என்பதை தெரிந்தா
என்னில் உனக்கு அதிகம் பிடித்தது
என் பேச்சு என்றாய்
அன்றில் இருந்து நான் யாரிடமும்
வாய் காட்டுவதே இல்லை........





**************







உன்னை சந்திக்க கண்மூடித்தனமாய்
கார் ஓடி வந்தாலும்
கவனமாய் உன்னை தேடிக்
கொண்டிருக்கும் என் மனசு.............






**************







எல்லா எழுத்துக்களையும் வைத்து
கவிதை எழுதினாலும்
இன்னும் என்னால் உனக்கு பெயர்வைத்ததால்
கவிஞனான உன் தந்தைபோல்
 
இரண்டு எழுத்தில் அழகான கவிதை
எழுத முடியவில்லை.........






*****************






 
நாடு கிடைக்க போராடுபவன்
போராளி என்றால்
 நீ கிடைக்க போரடும் நான்
காதலாளிதான்..........






*****************






 
என்னை எழுதவைத்துக்
கொண்டிருக்கும் நான்
எழுதாத கவிதை நீ.......






****************************************
****************************
********************
******
**
*



                                                                 
-யாழ்_அகத்தியன்




 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free