காதலானவனே...........!
![](http://www.pitaara.in/wp-content/gallery/khatta-meetha/khatta_meetha_movie_Wallpapers_6.jpg)
நீ எழுதும் கவிதை அழகுதான்
அதற்காக யார் கண்ணையும் நம்பி
என்னைக் கைவிட்டுவிடாதே......
**************
![](http://www.nfpg.co.nz/Portals/577/images/valentines_pic.JPG)
நீ இல்லாத தருணங்களில்
வாடிப்போகும் எனக்காக
நீ கொடுத்த பூச்செடிதான்
என்னை மலரவைத்துக்
கொண்டிருக்கிறது........
***************
![](http://3.bp.blogspot.com/_o_6N8zr5RiU/TGt1LT-3vWI/AAAAAAAAC_o/BtlgK2dLMy4/s1600/lahore_HINDI_MOVIE_WALLPAPER%5B1%5D.jpg)
எதுவும் கேக்காமலே என் மடியில்
நீ உறங்கியபோதுதான் தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்
அதற்காக உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்
என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்.......
***************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/ghghgfghf.jpg)
எவ்வளவு அவசரமாய் வாசல் கடக்கையிலும்
உன்னை ஞாபகப்படித்தி விடுகிறது
முதல் முதல் சந்திப்பில் நான்
வரும்வரை நீ சாய்ந்து நின்ற
வீதிச்சுவர்..........
***************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/hththththt.jpg)
நீ பிரியும்போது கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய் உன் வலதுகையை
கொடுத்துவிட்டு போயிருக்கலாம்
என்னை பிரியவிடாது அணைத்துக்
கொண்டிருந்திருக்கும்.......
********************************************
*************************
****************
*********
****
**
*
-யாழ்_அகத்தியன்
|