ஒரு நாள் உன்னை விட்டு
பிரிந்து வந்ததற்கே
எப்படி பிரிய முடிந்ததென்றா
கேக்கிறாய்...
எங்கே உன் இதயத்தை
திறந்து பார் பிரிவுக் கவிதை
எழுதிக்கொண்டிருப்பேன்.....
**************************
நீயே சொல் .. என் நம்பிக்கை
நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல்
நீ தள்ளியே நின்றால்
விழுந்திட மாட்டெனோ....
*************************
உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும்
சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும்
உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை
வாட்டுகிறது....
************************
உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா
சரி வா போய் வருவோம்
அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா
கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி......
**************************
உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான்
ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும்
பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து
கொள்கிறேன் அவ்வளவு அவசரம் எனக்கு......
Today, there have been 214 visitorson this page!
பகல் "நிலா"
யாழ்_அகத்தியன்
என் சிந்தனையில் பூத்தவைகள்...!
**உனக்கு
நண்பன் இருக்கிறானோ
இல்லையோ உனக்கு எதிரி
இருக்க வேண்டும்
ஏனெனில்
உன்னிடம் அணைக்கும் சக்தியைவிட
உன்னிடம் எதிர்க்கும் சக்தியையே
நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்**
**உன் உருவத்தை உனக்கே காட்டிக்கொடுப்பது கண்ணாடி உன் உள்ளத்தை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுப்பது உன் பேச்சு**
**தோல்வியென்னும் படியால்
ஏறித்தான் வெற்றியென்னும்
பரிசை பெறமுடிகிறது**
**விழுந்தால்
மண்ணோடு மண்ணாக
நீ இன்னும் சாகவில்லை
மறந்துவிடாதே…
இன்னும் நீ உயிர்
உள்ள விதை என்பதை**
**உன் பேனாவைக் கூட மூடிவைக்காதே அதை திறக்கும் வினாடிகளில் கூட நீ எழுத நினைத்ததை மறந்துவிடக் கூடும்**
இப்படிக்கு நான்...!
**என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்**
**நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது பெறுமதி
வாய்ந்ததாக இருக்குமானால்.**
**என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது**
**அழகை பார்த்தே முதல்
காதல் வருகிறது
அழகிடம் தோற்றுப்போயே
உண்மைக் காதல் வருகிறது**
**என்னை விட என்னைக்
காதலிப்பவளைத்தான்
கல்யாணம் செய்ய
விரும்புகிறேன்
ஆனால் அதற்கு
அவளைவிட அவள் காதல் மேல்
எனக்கு நம்பிக்கை வர வேண்டும்**
**கட்டாயத்தில் வருவதல்ல காதல்
கட்டாயங்களை மீறி வருவதே காதல்**
**என்னை விட என்னைக் காதலிப்பவளைத்தான் கல்யாணம் செய்ய விரும்புகிறேன் ஆனால் அதற்கு அவளைவிட அவள் காதல் மேல் எனக்கு நம்பிக்கை வர வேண்டும்**
**யாரைக் காதலிக்கிறாயோ அவளை ஆழமாய் காதல் செய் அதுவே அவள் பிரிந்து சென்றால் அவளுக்கான மிகப் பெரிய தண்டனை**
**உனது முடிவு என்பது முடிவெடுத்தபின் உன்னை கவலைப்பட வைக்காததா இருக்க வேண்டும்**
**இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.**
**வாழும்வரை
நிழல் தருவேன்
இறந்தால்
என் காதல்
துணைவியே
என்னை
விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்**
பகல் நிலா........!
**உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே..**
**நீ ஏற்றிய விளக்குகளில் எல்லாரும்
குளிர் காய்கிறார்கள் நான் மட்டும்
உன் இருவிழிப்பார்வையால் எரிந்து
கொண்டிருக்கிறேன்**
**உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ**
**ஆயிரம் சொன்னாலும் உலகம்
அன்பே உனை சேர அகிலமே
எதிர்த்தாலும் கோழையாய் நான்
முலையில் படுத்துறங்கமாட்டேன்
எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை வேண்டாம்
எனக்காய் நீயும் ஓடி வரவேண்டாம்
விழுப்புண் அடைந்தாலும் வேங்கை நான்
உன்னைக் கேக்க வாசல் வருவேன்**
**நீ வரும்வரை
என்னை எவரும்
கவனிப்பதில்லை
உன்னோடு இருக்கையில்
கவனிக்காததென்று
எதுவும் இல்லை
அதற்காகவாவது
உன்னோடு கூட
வரலாம் நான்**
**எனக்குச் சம்மதமே
நீ
மாலையாய் இருப்பின்
அதில் நான்
மலராய் இருக்க மட்டுமல்ல
நீ
பாலையாய் இருப்பின்
அதில் நான்
மணலாய்க் கிடக்கவும்**