நான் கிறுக்கன்தான்.........!
![](http://1.bp.blogspot.com/_3NHjbxWmNTo/TPy4B5rkxZI/AAAAAAAAACk/ucPtXd1npQ0/s1600/414.gif)
என் கவிதைகளில் பலது
உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன் அவையாவும்
கற்பனைகள் என்பதால்.........
************
![](http://1.bp.blogspot.com/_3dVzeCbqCSw/SjENpf8s8SI/AAAAAAAAAzk/f394xtFnw4c/s400/192118image006.jpg)
என் கவிதைகளில் எழுத்துப்
பிழைகள் அதிகம் இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன் மன்னித்துவிடு
நான் உன்னைப்போல்
படித்தமேதையல்ல...........
************
![](http://3.bp.blogspot.com/_rtLlTMHzsF0/SWaLRaPZKuI/AAAAAAAABB0/2eh6VxVrdqg/s320/namathukavithai45.jpg)
என் கவிதைகளில் தலைப்புகள்
பொருத்தமற்றதாக இருக்கலாம்
ஏற்றுக்கொள்கிறேன் உண்மைதான்
நான் எழுத நினைப்பது ஒன்று
எழுதி முடிப்பது வேறொன்று.......
எல்லாம்
உன்னை காயப்படுத்தக்
கூடாது என்பதால்தான்.............
************
என் கவிதைகள் எதுவுமே
நீ வாழ்த்த தகுதியற்றனவாக
இருக்கலாம் இதையும்
ஏற்றுக்கொள்கிறேன்
உன்னால் கிறுக்கனானேன்
என்பதால்.................
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|