உயிரானவளே......!
வாயாடியாய் இருந்தும் அமைதியாய்
வந்தமரும் புதிய மாணவிபோல்
வந்தமர்ந்தாய் என் இதய
வகுப்பறையில் நீ............
************
![](http://3.bp.blogspot.com/_K4Wj-LHVGL4/TJCfT6xllgI/AAAAAAAAAUU/DL6gAiL9nIo/s1600/autumn-girl_1024x768.jpg)
என் முதல் வரி நீ காதலித்தையும்
மறுவரி நீ கைவிட்டதையும்
எப்படியாவது காட்டிக்
கொடுத்துவிடுகிறது
என் கவிதைகள்..............
************
![](http://img.funscrape.com/en/love/390.jpg)
பலரோடு இருக்கையிலும்
தனிமையே உணர்கிறேன்
நீ இல்லாததால்............
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/yewlsd.jpg)
உனை மாதத்தில் மூன்று நாட்களில்
என் மடியில் தாலாட்டியதுதான்
ஞாபகம் வருகிறது தாய்மார்களை
காணுகையில்...........
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/moonwoman3os.jpg)
வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக..............
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|