காதலாகி.....!
நம் வாய்ச் சண்டைகளை
எல்லாம் முடித்து வைக்கிறது
நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து........
************
![](http://www.rejovasan.com/wp-content/uploads/2009/11/loveletter5.jpg)
பலர் என் மேல்
படர்ந்தபோதும்
என்னுள் முளைத்தது
நீ மட்டும்தான்...........
************
![](http://2.bp.blogspot.com/_SCATwZ5cQAQ/TDKytZsAl-I/AAAAAAAAADc/DcH0yqZX3L4/s1600/kiss-20.jpg)
நீ நடுங்கி நடுங்கி தந்த
உன் முதல் முத்தத்தை
என்னால் இன்னும்
மறக்க முடியவில்லை.....
நிலா நடுக்கத்தில்
பயந்து பயந்து
வாங்கியதால்.......
***************
![](http://www.virakesari.lk/cinema/galery/admin/actress/actressL_img/uploaded/meera.jpg)
நீ பூச் சூடி பொட்டு
வைக்கும்போது
முடித்து வைக்கிறேன்
உனக்கான என் அன்றைய
கவிதையை.......
*************
![](http://nanavuhal.files.wordpress.com/2010/02/kr04.jpg)
அடிக்கடி நீ காணாமல்
போகும் தருணங்களில்தான்
உணர்கிறேன் நீ தேவதை
என்பதை.............
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|