என் இதயம் மென்மையானது
அதனால்தான்
நான் எந்த தவறுசெய்தாலும்
என்னை கண்டிப்பதில்லை
அப்படிப்பட்ட என் இதயத்தை
கைப்பற்றி என்னை எதுவுமே
செய்யாமல் பண்ணிவிட்டாய்....
************
![](http://1.bp.blogspot.com/_y1wZQ0tErzg/SSq0k8LlEgI/AAAAAAAAAOg/Deb97rCphUs/s320/untitled.bmp)
உன் விழிவீச்சு படும்வரை
அமாவாசை இரவுக்குள்
மறைந்து கிடக்கின்றன
என் கவிதைகள்....
************
![](http://1.bp.blogspot.com/_P5IvJHxFuDY/TPj1ABwLa7I/AAAAAAAAAvs/kijwsHcxaVc/s1600/lovers-wallpaper.jpg)
நீ மட்டும்தான் சிறந்த நீதிபதி
நான் எந்த தவறுசெய்தாலும்
கிள்ளுவதை மட்டுமே
தண்டனையாய் தருகிறாய்......
*************
![](http://www.christmasgeek.com/images/Christmas-gift-for-girlfriend.jpg)
உனக்கு
எதை வாங்கி வருவது
என்ற குளப்பத்தில்
கண்ணை மூடியபடி
ஒன்றை எடுத்தேன்
கண் திறந்து பார்க்கையில்
கையில் இருந்தது மட்டும்
சிரித்துக் கொண்டிருந்தது
கடையில் இருந்ததெல்லாம்
அழுது கொண்டிருந்தது....
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/12.jpg)
நீ வாசிக்க
ஆரம்பிக்கிறாய்
என் கவிதைகள்
ஒவ்வொன்றும்
கரை சேர்கிறது....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|