இயல்பானவளே......!
தன்னை விதைத்து
காதலை எதிர்பார்த்தவர்கள்
பட்டுப்போனார்கள்
காதலை விதைத்து
உன்னை எதிர்பார்த்த
நீ மட்டும் என் மனசெங்கும்
படர்ந்திருக்கிறாய்.....
***************
நீ என்னை மட்டும்
உன் வசப்படுத்தவில்லை
என் கவி வாசகர்களையும்தான்
பார் கவி எழுதிய என்னை
விசாரிக்காமல்
எல்லாரும் யாருக்காக எழுதியது
என்று உன்னை விசாரிப்பதை.......
*****************
எல்லாரும் இருந்தும் யாருமில்லாத
பூமியில் வாழ்வதைவிட
யாருமே இல்லாத வானத்தில்
நிலாவே உன்னோடு மட்டும்
வாழவிரும்புகிறது
என் காதல் மனசு......
************
என் காதலை கவிதையால்
சொல்ல நினைத்து
தினம் தோற்று போவதற்கு பதில்
முத்துக்களால் உனக்கு மாலையிட
கடலில் மூழ்கி
மூச்சடைத்தே இறந்துபோய்
ஒரே நாளிலே என் காதலை
நிருபித்திருக்கலாம்......
****************
என்றும் உன் அருகே நடந்து வரப்போகும்
கணவனாகும் வரம் கிடைக்காமல் போனாலும்
உன் கால்தடங்கள் தேடியே ஓடிவரப்போகும்
உன் குழந்தையாகும் வரம்கொடு
அது போதும் எனக்கு
என் காதல் தாயும் நீயே
என்ற அன்புக்கு......
*********************************
***********************
****************
****
**
*
-யாழ்_அகத்தியன்
|