செல்லமானவளே........!
![](http://blogsofraghs.files.wordpress.com/2008/11/surya-and-sameera.jpg)
எல்லோருக்கும்
தை பிறந்தால்தான்
வழி பிறக்கும்
எனக்கு மட்டும்
எப்போதும் தைதான்
என் வழியே
நீ என்பதால்......
************
![](http://one.obuzz.com/admin/Upload-Image/Image/thmbimage-16-8508.jpg)
வந்துபோகும் நாட்கள் போல்
வந்து போகிறது
நீ என்னோடு இருக்கும்
ஒவ்வொரு வருசங்களும்.....
************
![](http://1.bp.blogspot.com/_WIFlbAzMDaQ/TPIFC9S14hI/AAAAAAAACDE/1Rc9k90Jj1U/s1600/ayu.jpg)
நம் கல்யாண வருசத்துக்காகவே
என் காதல் வருசங்கள் ஒவ்வொன்றும்
நாட்களை ஓடவைத்துக்
கொண்டிருக்கிறது......
***********
![](http://4.bp.blogspot.com/-kntko0Xj0uI/TZc-WC8_-0I/AAAAAAAAUeY/OQzoMC2SwI4/s1600/180_Tamil_Movie_Stills_Wallpaper_8.jpg)
நான் எழுதாத கவிதை
நீ என்பதிலும்
எனக்கு மகிழ்சியே
ஏனெனில்
என் கவிதைகள்தான்
யார் யாரோ பெயர்களில்
உலகம் சுற்றுகிறதே......
**********
![](http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSkrIcUHvvxgWjEpasAt39Qv2Ca6kyvlussRbKY68Yukeob7xB4zA&t=1)
வருசத்தில் முதல் நாளில்
மட்டும் வாழ்த்த
ஆயிரம் உறவுகள்
வாழ் நாள் முழுவதும்
என்னை வாழவைக்க
நீ.......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|