* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  தொடாத சிணுங்கி....!
 


தொடாத சிணுங்கி.....!




 
உன் மெளனம் கூட  ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று......



************





பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து
 உன்னை படம் எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை தெரிகிறது.....




************




இரவு வந்தால் போதும் கவிதை
நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில் அல்ல
 என் கைபேசிக்கு பக்கத்தில்.....




************



 


உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர......





************




வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்
போடும் வரைதான் அழகாக
தெரிகிறது வாசல்.......





 **********************************
************************
***************
*****
**
*


 

-யாழ்_அகத்தியன்
 
  Today, there have been 1 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free