தொடாத சிணுங்கி.....!
உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக
பேச வேண்டுமென்று......
************
![](http://i10.glitter-graphics.org/pub/78/78180xoplfo4zcp.gif)
பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து
உன்னை படம் எடுத்ததில் உன்னைப்
பறித்த பூவின் புன்னகை தெரிகிறது.....
************
![](http://pro.corbis.com/images/42-17097450.jpg?size=572&uid=%7BF3AE09FA-5943-45DE-911D-0CECF7A7DA29%7D)
இரவு வந்தால் போதும் கவிதை
நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன்
வானொலிக்கு பக்கத்தில் அல்ல
என் கைபேசிக்கு பக்கத்தில்.....
************
![](http://4.bp.blogspot.com/_CMHl1TR1IWU/TLAgR6NiiVI/AAAAAAAAFkY/BYwZ9suCV8s/s400/alipaythe.JPG)
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர......
************
![](http://2.bp.blogspot.com/_676PnuH7ok4/SlJqTZ70EVI/AAAAAAAAAEg/limG1BY4rv8/s320/kolam.jpg)
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்
போடும் வரைதான் அழகாக
தெரிகிறது வாசல்.......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|