* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  கவியானவளே...[11]
 



கவியானவளே...[11]







சிறு துளி பெருவெள்ளம்
உன் கூந்தல் துவட்டியபின்னும்
தூறும் துளிகள் எனக்கு.....






*******************







உன்னைக் காதலித்ததால் அல்ல
நீ என்னை காதலிக்காததால்தான்
ஆனேன்  கவிஞனாய்......






*********************







விரும்பித்தான் காதலித்தேன் உன்னை
விரும்பாமல் காதலிதுக்கொண்டே
இருக்கிறது கவிதைகள் மட்டும்
என்னை.......






********************







நீ சூடும் பூவுக்கு எப்படி
கற்றுக்கொடுத்தாய்
நீ சிரிக்காத போதும் சிரிக்க.....





********************








உன் கண்களில் படித்துவிட்டுத்தான்
வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு
கவிதைகளையும் பல கண்களுக்காய்..






*******************







உன்னைக் காதலித்ததால்
தலைக்கனம் எனக்கு
நீ காதலிக்காததால்
தலைக்கனம் என்
கவிதைகளுக்கு....






**********************************
************************
***************
*****
**
*

-யாழ்_அகத்தியன்

 
  Today, there have been 5 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free