கவியானவளே...[08]
![](http://bp0.blogger.com/_sFmNIqJh3vA/SJX7-OOhOhI/AAAAAAAABYk/yfSKpL0aQ9E/s400/art_260_4.jpg)
கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள்
உன்னைத் தருசிக்காத
பக்தர்கள் மட்டும்....
*********************************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/jsel.jpg)
உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில்
யார்யாரோ பறித்து செல்கிறார்கள்
தங்கள் காதலியை கண்டுபிடித்தவர்கள்........
*******************************
![](http://ennasitharalkal.webs.com/waiting.jpeg)
என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான்
ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது
இல்லையென்றால் தற்கொலை
செய்திருப்பேனா...?
*******************************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/5679.jpg)
என்னைப்போல் யாரும் உன்
அமைதியை விரும்ப மாட்டார்கள்
உன் கீழ் உதடாய் நீ மாறும்போதும்
உன் மேல் உதடாய் நான்
மாறும் வரையிலும்..............
*******************************
![](http://www.koodal.com/cinema/gallery/actress/anjali/anjali_8_109200754834123.jpg)
இன்றுவரை காதலோடு வரும்
எந்த பெண்களுடனும் நான்
உரையாடியதில்லை காரணம்...
எனக்கே தெரியாத உனக்கு
துரோகம் செய்யக் கூடாது
என்பதால்..........
*******************************
![](http://2.bp.blogspot.com/_f7mJAzX1cHA/TGfoZ6h5dNI/AAAAAAAAAEk/v7DoQ9Z2HKQ/s1600/mirror.bmp)
முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி
முன் நின்று என்னோடு உரையாடு
எத்தனை தடவை என்னை
பொறாமை படவைத்தது என்று
எனக்குத்தான் தெரியும்...........
*****************************
![](http://janasara.files.wordpress.com/2008/11/kadal-konden11.jpg)
ஒரு வார்த்தை கூட பேசாத உன்னோடு
தினமும் பேசிய களைப்பில்தான்
விடிகிறது என் ஒவ்வொரு
தூக்கமும்...........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|